தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
“குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம்..!”
உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு.
“எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல்.
உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன?
1.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை.
2.சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாற்றிட வழிவகை.
3.பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: பெரியார் பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வழிவகை.
4.அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கிட வழிவகை.
5.தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: மருத்துவ பல்கலைக்கழக நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்திட வழிவகை.
6. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாற்றம் செய்ய வழிவகை.
7. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: திறந்தநிலை பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர வழிவகை.
8.தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சட்டப் பல்கலைக்கழக துணைவேந்த நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வழிவகை.
9.தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை.
10.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: வேளாண் பல்கலை. துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வழிவகை.