பாடல் காட்சி லீக்! ஷங்கர் அதிர்ச்சி!

பிரமாண்ட படங்களை கொடுக்கும் இயக்குநர் ஷங்கருக்கு ,இப்போது சோதனைக்காலம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ‘இந்தியன் -2’இன்னும் முடிந்த பாடில்லை.ஹீரோ கமல்ஹாசன் நடித்து முடித்து விட்டார். ஆனாலும் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி உள்ளது.

ஷங்கர் ஒரு போதும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்புக்கொள்வதில்லை.இந்தியன் -2 வளருமா? நின்று போகுமா? என்ற சந்தேகத்தில், ராம் சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றையும் தொடங்கினார்.படத்துக்கு ’கேம் சேஞ்சர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஷங்கருக்கு பொருத்தமான பெயர்தான்.

இதன் ஷுட்டிங்கும் முடிவடையும் நிலையில் உள்ளது.ஆர்.ஆர்.ஆர்.எனும் மெகா ஹிட் கொடுத்த ராம்சரண், இந்த படத்தையும் பெரிதும் எதிர் பார்க்கிறார்.

இந்தப்படத்தில் ,கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். நம்ம ஊர் ஆட்கள் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த, தில் ராஜு தயாரிக்கும்’கேம் சேஞ்சர்’படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜாபிலம்மா’ என்ற பாடல் சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள, இந்த பாடல் லீக்கானதால் ஷங்கர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளார்.

இந்த பாடலை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்..பாடல் காட்சியை வெளியிட்டவர்கள் யார் ? என பட நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

’யார் அந்த கறுப்பு ஆடு?’என எந்திரனில் வசனம் வைத்தவர், அந்த வசனத்தையே நொடிக்கு நொடி இப்போது பேசி வருகிறார்.

-பாரதி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *