பா.ரஞ்சித் படத்தில் ஆர்யா வில்லன்.

பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக
நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஆர்யா.

ஹீரோக்கள் வில்லன் வேடத்தில்
நடிப்பது தமிழ் சினிமாவில் புதிய விஷயம் அல்ல.
ரஜினிகாந்த், ( எந்திரன்) கமல்ஹாசன்,
( ஆளவந்தான் ), சத்யராஜ் ( அமைதிப்படை)
ஆகியோர் தங்கள் படங்களில், வில்லனாக நடித்துள்ளனர்.
அந்த வரிசையில் சேருகிறார், ஆர்யா. ஆனால் அவர் வில்லனாக நடிப்பது தினேஷ், ஹீரோவாக நடிக்கும் படத்தில்.

விக்ரம், பார்வதி திருவோத்து,
மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான
‘தங்கலான்’ என்ற படத்துக்கு பிறகு பா.ரஞ்சித்
இயக்கும் ‘வேட்டுவம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது.

‘அட்ட கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்க,
வில்லனாக ஆர்யா நடிக்க சம்மதித்துள்ளார்.
அவர் ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கிய
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஹீரோவாக
நடித்திருந்தார். எனவே, பா.ரஞ்சித்
கேட்டுக்கொண்டதால் ‘வேட்டுவம்’ படத்தில்
வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *