பி.எஸ்.எல்.வி விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் – ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாய்கிறது.!

ஏப்ரல்.22

சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி.,பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டுவருகிறது.

அதன்படி, சிங்கப்பூர் நாட்டின் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் பாயவுள்ள இந்த ராக்கெட்டிற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது.

சிங்கப்பூர் நாட்டின் இந்த டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *