“புயலுக்கு முன் வரும் இடி” – நயன்தாரா பற்றி ஷாருக்கான் கருத்து,

விஜய்க்கு சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ , இயக்கியுள்ள  ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இரட்டை வேடங்களில் வருகிறார். ( விஜய்காந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை  அட்லீ கொஞ்சம் மாற்றி இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உண்டு)

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இந்தியில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம்  செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை  படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் நயன்தாரா இருக்கும் இந்த போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ‘புயலுக்கு முன்வரும் இடி அவள்’ என்று தனது பதிவில் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *