பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு, பதை பதைக்க வைக்கும் விபத்து.

June 19, 23

கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தும், பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்தும் மேல்பட்டாம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நிலைதடுமாறி சென்றது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். எதிரில் சீரற்று வந்த பேருந்து மோதாமல் இருக்க, ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக ஓட்டினார்; இருந்தபோதும் பண்ருட்டி பேருந்தில் முன் டயர் வெடித்து எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதால் விபத்த நேரிட்டது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். இதில் படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்களோடு அப்பகுதியில் இருந்த இளைஞர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் பலியான 5 பேர்களில் 3 பேர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்த சீனுவாசன் என்பதும், மற்றொருவர் தனியார் பேருந்து ஓட்டுநர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தஅங்காளமணி என்பதும், மேலும் ஒருவர் சுகம் பேருந்து நடத்துனர் முருகன் என்பதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் பண்ருட்டி-கடலூர் சாலையில்  3 மணி நேரத்திற்கும் மேல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தொகையை அறிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *