மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவிக்குப் பதில் சரிதா.. கடைசி காட்சியில் மழை பெய்த ரகசியம்.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளுள் முதன்மையானவர் சரிதா. 45 ஆண்டுகளாக திரைஉலகில் இருக்கிறார். நடுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வார்.நீண்ட இடைவெளிக்கு பிறது அவர் நடித்துள்ள மாவீரன் சக்கைபோடு போடுகிறது.

மாவீரன் பட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட சரிதா, ’ மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது’ என்ற புதிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.

‘மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்த கேரக்டரில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் பாலுமகேந்திரா விரும்பினார்.என்னிடம் கதை சொன்னார்.ஆனால் அப்போது நான் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் மூன்றாம் பிறையில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் எனக்கு வருத்தம் இல்லை.அந்தப்படத்தில் ஸ்ரீதேவி அற்புதமாக நடித்திருந்தார்’என மனம் திறந்தார், சரிதா.

மூன்றாம்பிறை படத்தின் கிளைமாக்ஸ் குறித்து மறைந்த பாலுமகேந்திராவும், சுவாரஸ்யமான தகவலை தெரிவித்து இருந்தது நினைவு கூறத்தக்கது.

’எனக்கு ரொம்பவே கடவுள் நம்பிக்கை உண்டு.அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார்.ஒரு சம்பவத்தை சொன்னால் நம்ப மாட்டீர்கள்.ஆனால் உண்மை.மூன்றாம்பிறை படத்தின் ரயிலடி காட்சியை படமாக்கும் போது இயற்கையாகவே மழை பெய்தது.அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்.

மூன்றாம்பிறையை இந்தியிலும் எடுத்தேன். அந்த ரயிலடி காட்சியின் ஷுட்டிங்கின் போது நல்ல வெயில். தமிழில் கிடைத்த எஃபெக்ட் இந்திக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன்.கொளுத்தும் வெயிலில் அந்த காட்சியை படமாக்க வேண்டிய நிலையில் ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்.அடுத்த நிமிடமே மழை கொட்டியது.காட்சியை நான் எடுத்து முடிக்கும் வரை மழை நிற்கவே இல்லை’என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறி சிலிர்த்து இருந்தார் பாலுமகேந்திரா.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *