விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்கச் சொன்ன ரஜினி.

ரஜினிகாந்த், உயர உயர பறந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ரஜினிக்கு, கதை உருவாக்கிய இயக்குநர்கள், அவரைப்போல் தோற்றம் கொண்ட விஜயகாந்தை அணுகினார்கள்.

அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த நடிகர் என்ற அடையாளம் பெற்ற விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களையும் வளர்த்து விட்டார்.

தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் . திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

அண்மையில் விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சொன்ன செய்தி இது:

‘’விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கூறி அவரின் நண்பர் ராவுத்தரை சந்தித்தேன் – அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடிவிடுவேன் என்று நினைத்து, அப்போது விஜயகாந்த் வாங்கும் சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டார்.

அவர் கேட்டதற்கு நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். அட்வான்ஸ் எப்போது வேண்டும் என்று நான் கேட்டவுடன் அவர் ஷாக்காகிவிட்டார்
அப்போது உருவான படம் தான் கூலிக்காரன் – இந்த படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து எடுக்க முடிவு செய்தோம் – அவரிடம் பேசினேன் .அப்போது அவர் நிறைய படங்களில் ‘கமிட்’ ஆகி இருந்த தகவலை சொன்னார்.

அதன்பிறகு ,ரஜினிகாந்த் தான் விஜயகாந்தை வைத்து எடுங்கள் என்று சொன்னார் ‘’என கலைப்புலி தாணு கூறினார்,

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *