நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் போல் இவர் வெற்றி பெறவில்லை.

இப்போது புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய .அன்பு இந்தபடத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு,  திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார ஒடிசா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்பு ஆடி 18 – ஆம் தேதி அறிவிக்கப்படும். என பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

யானைகளை மையப்படுத்தும் திரைப்படங்கள் பெரும்பாலும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. அந்த ராசியில் சண்முக பாண்டியனின் புதிய படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

0000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *