விஜய்க்கு கதை சொல்ல கார்த்திக் சுப்புராஜ் ஆர்வம் !

ஆகஸ்டு.04-

பீட்சா’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ்.

இதனை தொடர்ந்து டைரக்ட் செய்த ஜிகிர்தண்டா , இறைவி போன்ற படங்களால், கவனம் ஈர்த்தவர். ரஜினிகாந்தின் ரசிகர். அவரை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கினார். அவருக்கும் ,ரஜினிக்கும் பெரிய வெற்றிப்படமாக, ’பேட்ட’ அமைந்தது.

இப்போது ‘ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாவது பாகமான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில்  ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்துள்ளனர். இதன் கொண்டாட்டம் அண்மையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்,“நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. . ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் முடிந்த பிறகு விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். இது அவரது படங்களில் சிறந்த படமாக இருக்கும்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *