விஜய் மகனுக்கு ஜோடியாக தேவயானி மகள் நடிக்கிறாரா?

 

இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ராஜகுமாரன்.

இவர், சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான “நீ வருவாய் என” படம் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆனார்.

அஜித், பார்த்திபன்,தேவயானி ஆகியோர் நடித்திருந்த அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு இந்த காதல் தம்பதி, சென்னையில் விக்ரமன் வீட்டுக்கு எதிரே சொந்த வீடு வாங்கி குடியேறினர்.

ஈரோடு அருகே ராஜகுமாரன், தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

அங்கு அடிக்கடி கணவன் -மனைவி இருவரும் சென்று வருவார்கள்.

இந்த தம்பதிக்கு பிரியங்கா, இனியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ‘நீ வருவாய் என’ படத்தின் 2-ம் பாகத்தை ராஜகுமாரன் இயக்க உள்ளார்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயும், தேவயானி மகள் பிரியங்காவும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இது பற்றி இயக்குனர்ராஜகுமாரனிடம் கேட்ட போது அவர் அளித்த விளக்கம்:

’’ விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு தான் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை பிறந்தது. 15 ஆண்டுகள் கடுமையாக போராடினேன்.முதலில் இயக்கிய “நீ வருவாய் என”படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

2-ம் பாகத்தை உருவாக்கும்படி பலரும் கூறினர். இப்போது அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். இந்த படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயை நடிக்க வைக்கும் திட்டம் இருப்பது உண்மைதான். சஞ்சய் ஜோடியாக எனது மகள் பிரியங்கவை நடிக்க வைக்கவும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம். அவளுக்கும் சினிமா ஆசை உள்ளது’’.

’நீ வருவாய் என’ ரசிகர்கள் காத்திருக்கிறார்கள், சஞ்சய்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *