மணிரத்தினம் இயக்கிய  தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி.ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன்பின் மணிரத்னத்தின், கம்பெனி ஆர்டிஸ்டாக மாறிப்போனார், அரவிந்த்சாமி.

ரோஜா, பம்பாய்,செக்கச்சிவந்த வானம் என மணிரத்னத்தின் வெற்றி படங்களில் எல்லாம், அரவிந்த்சாமி இருந்தார்.

தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப்படங்களிலும் நடித்தார்.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் பிடிவாதம் காட்டாமல் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்,அரவிந்த்சாமி.

படம் பெரிய ஹிட்.

புதிய படம் ஒன்றில் அவர் மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார். இதன் ஹீரோ-கார்த்தி.

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.

அந்தப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.

இதனைடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார்

இந்த படத்தை முடித்ததும் பிரேம் குமார் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.

இது- அவரது 27 வது படம்.

இந்தப்படத்தில் அவருக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

தனி ஒருவன் போல் இதிலும் அரவிந்த்சாமிக்கு வித்தியாசமான வில்லன் வேடம்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *