38 மாணவர்களை சுட்டும் வெட்டியும் கொன்ற பாவிகள் பற்றய திடுக்கிடும் தகவல்

ஆப்பிரிக்காவில்  சூடானை தொடர்ந்து இப்போது உகண்டா உலகச் செய்தியாகி உள்ளது.

அந்த நாட்டில் ஏ.டி.எப். என்ற தீவிரவாதக் குழு பள்ளிக்கூடத்தில் புகுந்து 38 மாணவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது. உகண்டாவின் கிழக்கு எல்லையில் காங்கே நாட்டை ஒட்டி உள்ள மாண்ட்பே நகரத்தில் உள்ள மேல் நிலைப்பள்ளி விடுதியில் இரவு 11.30 மணிக்கு இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. 38 மாணவர்கள் உட்பட 41 பேரை சுட்டடுக்கொன்ற தீவிரவாதிகள் அண்டை நாடான காங்கோவுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

மாணவர்கள் விடுதியை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் முதலில் தீ வைத்தனர். அப்போது தப்பி வெளியில் ஓடி வந்த மாணவர்களை சுட்டும் வெட்டியும் கொன்றனர்.

இதன் பிறகு மாணவர்கள் ஆறு பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் கிடைத்த உடன் உகண்டா நாட்டு ராணுவம் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த நாட்டில் 1986 முதல் யோவேரி முசெவேனி அதிபராக இருந்து வருகிறார். அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஏ.டி.எப். தீவிரவாதக் குழு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டில்  உகண்டா நாட்டு முஸ்லிம்கள் சிலரால் இந்த தீவிரவாதக் குழு உருவாக்கப்பட்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைக்கும் இடையே  மூண்ட மோதல் அங்கு இன்னும் ஓயவில்லை.

இப்போது உகண்டா வன்முறை பூமியாகி உள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *