வறண்டு போன சிறுவாணி அணை…. கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போய் இருப்பதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 45 அடிகள் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 வால்வுகள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பெரிய குழாய்கள் மூலம், கோவைக்கு கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லை. எனவே சிறுவாணி அணை படிப்படியாக வறண்டு வருகிறது. தற்போது அரை அடி என்ற நிலையில்தான் தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை மாவட்டத்துக்கான கூட்டுகுடிநீர்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு உள்ள உறைகிணற்றில் 4 வால்வுகள் உண்டு. இதில் 3 தண்ணீர் மட்டத்துக்கு மேல் தெரிகிறது. எனவே மீதம் உள்ள ஒரு வால்வு மூலம் மட்டுமே தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும்.

சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கனமழை பெய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த அணையும் வறண்டு, கோவையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால் இன்னும் ஒருசில நாட்களில் பருவமழை தொடங்கி விடும் என்றும், எனவே சிறுவாணி அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, குடிதண்ணீர் பிரச்சினை நீங்க வாய்ப்பு உள்ளது எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *