அசோக் செல்வன் கரம் பிடிக்கும் நடிகை

—-

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து வெளியான ‘தெகிடி’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார்.

அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ அசோக் செல்வனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்தப்படம் மாஸ் ஹீரோவாக, அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.

இவரும், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.கீர்த்தியும் நடிகைதான்.தும்பா, அன்பிற்கினியான் ஆகிய சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டினர்.இதையடுத்து, அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் ஆகியோரது கல்யாண நிச்சயதார்த்தம் இரு மாதங்களுக்கு முன்னர் ஓசைப்படாமல் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த நட்சத்திர காதல் ஜோடியின் திருமணம் அடுத்த மாதம் 13-ம் தேதி எளிமையான முறையில் நெல்லை மாவட்டம் ரெட்டியார் பட்டியில் நடைபெறுகிறது.

  1. இதன்பின் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த மணமக்கள் வீட்டார் முடிவு செய்திருப்பதாக இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் நெரிவித்தன.
Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *