ஆன் லைன் ரம்மி நிறுவனங்களுக்கு அரசு பிறப்பித்து உள்ள உத்தரவு என்ன ?

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தில் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் ரம்மி , போக்கர் நிறுவனங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் இருந்து இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் ரம்மி மற்றும் போக்கர் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று இந்த சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *