தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை கெடுத்தது திமுக தான் – அமித் ஷா பேச்சு

June 11, 13

தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம், அதற்கு காரணம் திமுக தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர். இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:- தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம். அதற்கு காரணம் திமுக தான். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தின் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்காக வைத்து அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடன் பாஜக நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். வரும் காலங்களில் ஒரு தமிழனையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *