“சோதனையின் நோக்கம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

June 13, 23

அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சோதனை குறித்த தகவல் கேள்விப்பட்டவுடன், சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள தனது அரசு வீட்டிற்கு வந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, வாக்கிங் சென்ற வழியில் வீட்டில் ரெய்டு என தகவல் வந்தது. அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி தகவல் அளிக்க வேண்டும் என்பது இல்லை. அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். வருமானவரித்துறை சோதனையில் பறிமுதல் செய்த விவரங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. IT ஆக இருந்தாலும், ED ஆக இருந்தாலும், எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தருவோம். அமலாக்கத்துறை சோதனையில் என்ன நடக்கிறது என பார்ப்போம்; என்ன நோக்கத்திற்காக சோதனை நடக்கிறது என்பதை பார்ப்போம்; சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்தில் வந்துள்ளனர் என்பது தெரியும் என்றார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *