ஆதரவற்று உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்து வரும் சமூக சேவகருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை நடிகர் ரஜினிகாந்த பரிசாக வழங்கியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக ஆதரவில்லாமல் அனாதையாக இறந்துவிடுகிறவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறார்.

இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனைப் பற்றி விசாரித்து அவருக்கு தேவைப்படும் ஆம்புலன்சுக்கான முழு பணத்தையும் ஷோ ரூம் ஒன்றில் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆம்புலன்ஸ் பரிசை ரஜினிகாந்த் கைகளால் தான் பெறுவேன் என்பதில் மணிமாறன் உறுதியாக இருந்து உள்ளார். இதனை அறிந்த ரஜினி அவரை அழைத்து தமது கைகளால் ஆம்புலன்சை ஒப்படைத்துள்ளார்.
மணிமாறன் மிகுந்த மகிழ்ச்சியோடு திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்று உள்ளார்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *