நீங்களும் அர்ச்சகராகள முடியும்..  ஆகமம் தெரிந்திருந்தால் போதும்..

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த  சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுகனேஸ்வர் கோயிலில்  ஆகமத்தின் அடிப்படையின் ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படையின் இல்லை என்றும் மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணை வந்தது. இந்து அறநிலையத் துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி , குறிப்பிட்ட கோவில்களில் பின்பற்றக்கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோவில் அர்ச்சகர்களிடமிருந்து, இருந்து தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் தாக்கல் செய்யவேண்டும் என்று வாதிட்டார்..

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், யார் வேண்டுமாலும்  அர்ச்சகர் ஆகலாம், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் , ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு ஆகம கோவிலிகள் எது, ஆகமத்தைப் பின்பற்றாத கோயில்கள் எது என்பதை ஆய்வுச் செய்ய குழு அமைத்திருப்பதை சுட்டி காட்டினார். அந்தக் குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்காமல் கோவில்களின் சொத்துப் பதிவேட்டில்  கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *