நரேந்திர மோடி வீட்டின் மீது அதிகாலையில் சுற்றிய மர்மப் பொருள் என்னவாக இருக்கும் ?

நரேந்திர மோடி வீட்டின் மீது அதிகாலையில் மர்மப் பொருள் சுற்றியதால் பரபரப்பு.

பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு  மேல் டிரோன் பறந்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பிரதமர் இல்லத்தின் மேல் இன்று ( திங்கள் கிழமை) அதிகாலை 5 மணியளவில் டிரோன்  ஒரு பறந்ததை பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் கவனித்து உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பிரதமரின் இல்லத்திற்கு அருகே மர்ம டிரோன் பறந்தது தொடர்பாக பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, அதிகாலை 5:30 மணிக்கு தங்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்பட்டு உள்ளது. உடனே பிரதமர் இல்லத்தைச் சுற்றிய பகுதிகளில் தீவிர தேடுதல் மேற்கொண்ட போதிலும் நடத்தப்பட்டப்பட்ட போதிலும், சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை முடிந்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என்றும் டெல்லி காவல்துறை தமது அறிக்கையில் கூறியுள்ளது.

விரைவாக விசாரணையை நடத்தி முடித்தால் மர்மத்துக்கு விடை கிடைக்கும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *