பெரிய நடிகர்கள் படத்தில் வாய்ப்புக் கிடைக்கவில்லை..நடிகையின் ஆதங்கம்.

காக்கா முட்டை’ படத்தின் மூலம் பெயரும், புகழும் குவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும்,தர்மதுரை, கனா,நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.தனது ஆதங்கத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்தினார்.

விழாவில் அவரது பேச்சு இது:

‘நான் நடித்த காக்கா முட்டை படம் வெளியானதும் நடிகர்கள் பலர் பாராட்டினார்கள். தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் போன்ற நடிகர்கள் தவிர வேறு யாரும் எனக்கு அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை.

காக்கா முட்டை படம் வெளியான பின்னர், சினிமா வாய்ப்புகள் இல்லாமல் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.இது எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது.

அதன் பிறகே கனா பட வாய்ப்பு கிடைத்தது.பெண்களை மையமாக கொண்ட அந்த படம்,எனது சினிமா பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.இதுவரை பெண்கள் சார்ந்த 15 படங்களில் நடித்து விட்டேன்.

இருந்தும் நட்சத்திர நடிகர்கள் யாரும் தங்கள் படங்களில் எனக்கு வாய்ப்பு தரவில்லை. அவர்கள் ஏன் என்னை இதுவரை அணுகவில்லை என யோசித்து கொண்டிருக்கிறேன்.இங்கே ஹீரோ-ஹீரோயின் பாகுபாடு நிறையவே உள்ளது’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பெரிய நடிகர்கள் சினிமாக்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் நான் கவலைப்படவில்லை. எனக்கென்று ரசிகர்கள் உள்ளனர்.இதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது’ என தன்னைத்தானே தேற்றிக்கொண்டார்.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *