சினிமாவுக்கு தற்காலிகசி ஓய்வு’’ மீரா ஜாஸ்மின் அதிரடி

கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மினுக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. எபி.எஸ்ஸி. படித்தவர் என்பதால் அவரது கூற்றை நம்பலாம். ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்து விட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அரிதாரம் பூசினார்.

‘பாடம் ஒண்ணு. ஒரு விலாபம்’என்ற மலையாளப்படத்தில் அற்புதமான  நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இதனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். பிறகு லிங்குசாமி இயக்கத்தில் உருவான ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.குறுகிய காலத்தில் விஜய், அஜித், தனுஷ் ஆகியோருக்கு ஜோடி சேர்ந்த மீரா, மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு துபாயில் பொறியாளராக இருக்கும் அனில் ஜான் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?

எண்ணை கிணறுகள் தேசத்தில் எட்டு ஆண்டுகள் கழித்தவர், மீண்டும் தாயகம் திரும்பி நடித்து வருகிறார்.

வாய்ப்புகாக, தனது முகநூல் பக்கத்தில் கவர்ச்சி படங்கள் பதிவிடுவதை சில இளவட்டங்கள்’40 வயதில் இது தேவையா?’ என கிண்டல் அடித்தாலும்  மீரா சட்டை செய்யவில்லை.

தமிழில் இப்போது சசிகாந்த் டைரக்‌ஷனில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தில்  நடிக்கும் மீரா ஜாஸ்மின், திரை உலகில் இருந்து கொஞ்சநாள் விலகி இருக்கப்போவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

‘இதுவரை எனது சினிமா பயணம் சிறப்பாகவே இருந்தது.நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது.எனது தனிப்பட்ட  வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.பின்னர் மீண்டும் பிடித்தமான படங்களில் நடிப்பேன்’ என மீரா ஜாஸ்மின் குட் பை சொல்லி உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *