ஜுலை,20-

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷனில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’. கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இயக்குநர்கள் எஸ்..ஜே.சூர்யா செல்வராகவன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று இருக்கின்றனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள்  நடைபெற்று வருகின்றன.

மார்க் ஆண்டனி விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.  அவர் படத்தின் கதையை விவரிப்பது போன்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசனும், மாவீரன் திரைப்படத்திற்கு விஜய் சேதுபதியும் குரல் கொடுத்திருந்தனர். அவர்களின் பாதையில்  கார்த்தியும் பயணித்துள்ளார்.

மாவீரனில் குரல் கொடுக்க விஜய்சேதுபதி பணம்  ஏதும் வாங்கவில்லை. மார்க் ஆண்டனியில் ‘வாய்ஸ்’கொடுக்க கார்த்தி சம்பளம் வாங்கினாரா? என்பது தெரியவில்லை.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *