மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில்,Continue Reading

மே.18 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள், குடும்பத்தினருடன் 15 நாள் பயணமாக கூட்டு வண்டியில் குலதெய்வக் கோயிலுக்கு புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்கிராமத்திற்கு நேற்று இரவு 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கினர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு வண்டியில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடையா அய்யனார்Continue Reading

மே.18 கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் 5 அடி நீள சாரைப்பாம்பு திடீரென நுழைந்ததால், அச்சமடைந்த பணியாளர் தெறித்து ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேநீர் கடை போன்ற கடைகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி சாரைப்பாம்பு, செல்போன் ரேக் வழியாக நகர்ந்து,Continue Reading

மே.18 தமிழகத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர். என். ரவி கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஒக்கியார் குப்பம் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி இரவு விற்ற விஷச் சாராயத்தை குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் புதுச்சேரிContinue Reading

மே.18 தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் உச்சமடைந்துள்ள நிலையில், வேலூர், திருத்தணி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துவருகிறது. ஒரு சில இடங்களில் இலேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்துவருகிறது. இருப்பினும், கடந்த 3 நாட்களாக காலை முதலேContinue Reading

மே.18 தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து வனத்துறை பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வனச்சரகர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று நேற்று காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00Continue Reading

மே.18 கோவையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கான மாத கட்டணத்தை ரூ.3540ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். கோவை‌ மாநகராட்சியில் திறன்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்‌ கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‌பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த வாகன நிறுத்துமிடத்தின் துவக்க நாளிலிருந்து வாகன நிறுத்தம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படி வாகனContinue Reading

மே.18 ஒடிசா மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் நரேந்திமோ மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொள்கிறார். புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்,Continue Reading

மே.18 நடப்பாண்டில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திரமோடியும், துணைத்தலைவராக சுமன் பெரியும் இருந்துவருகின்றனர். இந்த அமைப்பின் ஆட்சிமன்றContinue Reading

மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் , பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கவுள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் முதலில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறுContinue Reading