மே.5 சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் டி.என்.பி.எஸ்.சிக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1996-97 ஆம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராணி என்ற பெண், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் கணவர் இறந்த நிலையில், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிContinue Reading

மே.4 தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். பல்லைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களை தடுத்து நிறுத்தியதற்குக் காரணம், கல்வி என்பது ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது என்றா. தொடர்ந்து பேசிய அவர், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) ஒரு வரையறை உள்ளது. அதனுடன் எந்த மாநில விதிகளும்Continue Reading

மே.4 தமிழ் திரைப்படி நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 1953ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி மனோபாலா பிறந்தார். 1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் தனது சினிமா வாழ்க்கைத் தொடங்கினார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள்,Continue Reading

மே.4 தமிழகம் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 06.05.2023 மற்றும் 07.05.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரிContinue Reading

மே.4 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று அழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறுContinue Reading

மே.4 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தை அக்னிநட்சத்திர காலம் அல்லது கத்திரி வெயில் காலம் என அழைக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான கத்திரிContinue Reading

மே.4 சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டுவந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கூறி சுமார்Continue Reading

மே.4 உலகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றாக இருக்கும் டிவிட்டருக்குப் போட்டியாக, அதை ஜாக் டார்சியே, ப்ளூ ஸ்கை என்ற புதிய செயலியை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தை ஜாக் டார்சி உள்ளிட்ட 4 பேர் உருவாக்கினர். குறுகிய காலத்தில் டிவிட்டர் உலகம் முழுவதும் பெரிய விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்த, பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அதைContinue Reading

ஜல்லிக்கட்டு வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு?

மே.4 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இம்மாத இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகா மாநிலத்தில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கக் கோரியும் பீட்டா உள்ளிட்டContinue Reading

மே.3 விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ்கூவாகம் 2023 போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா அழகிப் பட்டம் வென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில், மிஸ் கூவாகம் அழகி போட்டி உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்Continue Reading