சத்யபால்மாலிக்கிற்கு சம்மன் -சிபிஐ நடவடிக்கை

ஏப்ரல்.22 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரத்தில், அம்மாநில முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்தியபால் மாலிக் இருந்தபோது, அனில் அம்பானியின் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதில்Continue Reading

தமிழகத்தில் ரமலான் கொண்டாட்டம்

ஏப்ரல்.22 தமிழகத்தில் ரமலான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்று, ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் ஈகைத்திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான்Continue Reading

உதகை 200 கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உதகை வெளியுலகத்திற்கு அறிமுகமானதன் 200 வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்புச் சுவர்களில் வரையப்பட்டுவரும் வண்ண வண்ண ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு, கோவை ஆட்சியராக இருந்த ஜான் சலிவன் என்பவர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்துவைத்து, உதகை நகரத்தையும் கட்டமைத்தார். இதைத் தொடர்ந்து, தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள்Continue Reading

கோவை -ஷீரடிக்கு சிறப்பு ரயில்

ஏப்ரல்.22 கோவையிலிருந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மே.1ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு சவுத் ஸ்டார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவில் பயணிகள் ரயில் , சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் தளங்கள் சார்ந்து பாரத் கெளரவ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி,Continue Reading

கொரோனா பரவல் - மத்திய அரசு கடிதம்

ஏப்ரல்.22 தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்திருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குContinue Reading

இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா

ஏப்ரல்.22 இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் டொமினிக் ராப், பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமரான டொமினிக் ராப் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். இந்நிலையில், டொமினிக் ராப், தமது துறை சார்ந்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவர் கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணையின்Continue Reading

பி.எஸ்.எல்.வி விண்ணில் பாய்கிறது

ஏப்ரல்.22 சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி.,பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டுவருகிறது. அதன்படி,Continue Reading

தொழிலாளர் நல மசோதா - நாளை ஆலோசனை

ஏப்ரல்.22 தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வரும் 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி,பொன்னிவாடி,எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணைContinue Reading

கோவை தண்டுமாரியம்மன் - சித்திரைத் திருவிழா

ஏப்ரல்.22 கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். கோவையில் பிரசித்திபெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமரிசையாகContinue Reading

டிவிட்டர் புளூ டிக் நீககம் - எலான் மாஸ்க் அதிரடி

ஏப்ரல்.21 சந்தா தொகுதி செலுத்தாமல், டிவிட்டரில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பக்கங்களில் இருந்த புளூ டிக்-கை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார். அதைத் தொடர்ந்து, டிவிட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,Continue Reading