அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம்

ஏப்ரல்.20 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும்Continue Reading

நீட் தேர்வுக்கு 20.87 லட்சம் பேர் விண்ணப்பம்

ஏப்ரல்.20 எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்த ஆண்டு 20.87 லட்சம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகப்படியான விண்ணப்பங்கள் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவியர் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் மற்றும் பிஎஸ்.சி நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மேContinue Reading

கர்நாடக தேர்தல் - வேட்பாளரை அறிவித்த ஓ.பி.எஸ்

ஏப்ரல்.20 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறுது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப்போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுContinue Reading

ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

ஏப்ரல்.20 மோடி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டபோது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?” என பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுContinue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்2023

ஏப்ரல்.20 கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கர்நாடகாவில் வரும் மே 25ஆம் தேதி உடன் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 5,21,73,579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 58,282 வாக்குச்சாவடிகள் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இது தொடர்பாக கடந்த மார்ச்Continue Reading

கோவையில் 20 இடங்களில் பவர் ஜார்ஜிங் மையம் - டாடா நிறுவனம் ஒப்பந்தம்

ஏப்ரல்.20 கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ செய்யும் நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் இணைந்து கோவை மாநகரில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் மற்றும் டாடா பவர்‌ நிறுவன விற்பனை தலைவா்‌Continue Reading

பல்வீர்சிங் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஏப்ரல்.20 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளை காவல்துறையினர் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அங்கு பணியில் இருந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்Continue Reading

ரூ.81 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

ஏப்ரல்.20 திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் – அவிநாசி சாலையில் தனியார் வங்கி (பெட் பேங்க், வங்கி சாரா நிதி நிறுவனம்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும்போது, அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து 81 லட்சம்Continue Reading

அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

ஏப்ரல்.20 திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ்Continue Reading

கேரளப் பெண்ணின் டிவிட்டர் பதிவு - சத்குரு பதில்

ஏப்ரல்.20 கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண், தான் இறக்கப்போவதாகவும், தனது இறுதி விருப்பம் நிறைவேற உதவுங்கள் என தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, சத்குருவின் பதில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்கள்‌ பொழுதுபோக்கானவை என்பதையும் தவிர, சில நேரங்களில்‌ பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்வதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. நம்‌ நெஞ்சை தொட்டுவிடும்‌ சம்பவங்களையும்‌ நடத்தி விடுகிறது. அந்த வகையில், கேரளப் பெண் ஒருவருக்கு டிவிட்டர் மூலம்‌ ஒரு நெகிழ்ச்சியானContinue Reading