தமிழகத்தில் வருவாய்த்துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்டContinue Reading

சென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறும் அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டContinue Reading

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.Continue Reading

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருந்துவரும் டி.சி.எஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முடிவடைந்த நிதியாண்டின் (FY23) நான்காம் காலாண்டில் 11,391 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.10,846 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,926 கோடியாக இருந்தபோது நிகர லாபம் 14.8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச்Continue Reading

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக்  சில்லறை விற்பனைக் கடைகள்  மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபானக் கடைகள் மூலம் 8047.91 கோடி ரூபாய் கூடுதல் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரிContinue Reading

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாடும் வகையில், 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பலContinue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று உற்பத்திContinue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்கள் உட்பட சுமார் 200.க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனContinue Reading

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.Continue Reading

நீலகிரி மாவட்டம் உதகையில் திருடிய நகைகளை பங்கு போட்டு கொள்வதில் திருடர்கள் இருவரிடையே பட்டப்பகலில் ஏற்பட்ட சண்டையால், இருவரும் போலீசரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உதகை நகரின் மைய பகுதியில் உள்ள திமுக அறிவாலயம் அருகே மதியம் 2 நபர்கள் மதுபோதையில் நகைகளை கையில் வைத்து கொண்டு பங்குபோட சண்டையிட்டு கொண்டிருந்தனர். அது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த உதகை B1 காவல்துறையினர் இருவரையும் பிடித்துContinue Reading