விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிர்வாகிகள் மீது உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தூக்கியடித்து, கோபத்தில் அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, திமுகContinue Reading

தி எலிபெண்ட்ஸ் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். இதையொட்டி, பொம்மன் பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரித்து வரும் பாகன்களுக்கு இடையேயான பாசபிணைப்பை வைத்து தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவண திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தைContinue Reading

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திலேயே முதல் முறையாக பெண் ஓதுவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்களை தவிர வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்வதை வட மாநிலத்தவர்கள் இந்தக் கோயிலை புனித தலமாகContinue Reading

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின் 13-ஆம் நாள் நிறைவு விழாவாக யானை வாகனத்தின் மீது எழுந்தருளி உலாவந்த ஏகாம்பரநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி‌ உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவமானது கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலியோடு அனுதினமும் காலை,இரவு நேரங்களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிContinue Reading

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமையவுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசியContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை திமுக உறுதிசெய்துள்ளது. 2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என உறுதி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பாஜக-வுக்கு எதிரானContinue Reading

கோவை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய ரயில்களின் புறப்படும் நேரத்தை தென்னகவே ரயில்வே மாற்றியமைத்துள்ளது. நாளை முதல் (ஏப்.9) இந்த புதிய கால அட்டவணை அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னைContinue Reading

கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வின் வாழ்க்கை வரலாறு நடிகர் மாதவன் நடிப்பில் திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு. தமிழ் வழியில் 4 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான கருவிகளை கண்டுபிடித்து சாதனைபடைத்தவர். ஷேவிங் ரேசர், ஜுசர், உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி,Continue Reading

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அதிகாலை நேரத்தில் கரடி உலாவந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் உலாவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள், இரவு நேரங்களில் உணவு, குடிநீர்Continue Reading

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாகContinue Reading