அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்Continue Reading

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். இந்த ஆண்டுக்கான ரமலான் பண்டிகையை வரும் 21ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த மாதம் 31ம் தேதி முதல் இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் இன்பதுன்பங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியைContinue Reading

கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகமாக இருப்பதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில், சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவேContinue Reading

கோவை மாவட்டத்தில் உள்ள கோவைக் குற்றாலத்தில் கொளுத்தும் கோடையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டிக் கொளுத்தும் வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். கோடையின் கொடுமையிலிருந்துContinue Reading

கோவையில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, ஆட்டிசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆட்டிசம் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள்Continue Reading

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,Continue Reading

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து சுற்றுலா பேருந்தில் 51 பேர் வேளாங்கண்ணி குருத்தோலை விழாவில் பங்கேற்க சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்றபோது, சாலையின் வளைவில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதிய பேருந்து கவிழ்ந்துContinue Reading

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, நெகமம் காட்டன் சேலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு சட்டம் 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை, இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில்Continue Reading

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஏப்.1ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர்Continue Reading

தூத்துக்குடியில் டவுன்சின்ட்ரோம் குறைபாடுடைய 4 வயது சிறுவன், 50 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தூத்துக்குடிமுத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் நிர்மலா தம்பதியினரின் 4 வயது சிறுவன் செல்வ சந்தோஷ். இவர் அதேபகுதியில் உள்ள சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். செல்வசந்தோஷ் பிறந்தபோதே டவுன் சின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோயால் 50 சதவீதம் பாதிக்கப்பட்டிந்தார். இதையடுத்து,Continue Reading