
தெறி, 2026 ஏப்ரலில் ரீ ரிலீஸ்

இரண்டு திருமணம் செய்துகொண்டது ஏன்? கமல் விளக்கம்.

தக் லைப் படத்தில் கமல் எழுதிய பாடல் வரிகள்.

ரவி மோகன், கார்த்தி சபரிமலைக்கு செல்லும் வழியில் கொச்சியில் சந்தித்தது யாரை ?

பொன்னியின் செல்வனில் 300 இசைக் கலைஞர்களை பயன்படுத்திய ரகுமான்.

எஸ்.எஸ்.வாசன் முடிவை மாற்றச் செய்த என்.எஸ்.கே.

ரூ 5 கோடி கேட்ட இளையராஐவுக்கு பதில்.

அஜித் படம் ரூ 100 கோடி வசூலை தாண்டியது.

நல்ல பாடகர்கள் வாயப்பு இல்லாமல் உள்ளனர்- ஹாரீஸ் ஜெயராஜ் கருத்து.

மங்காத்தா 2 – வெங்கட் பிரபு விளக்கம்.

ரஜினி, விஜயை முறியடித்தாரா விஜய் ?

பிரபல ரவுடியை சுட்டுப் பிடிக்க போலீஸ் உத்தரவு.

விஜய் சேதுபதியுடன் நடிக்க சசிகுமார் ஒப்புதல்.

சிகரெட் பிடித்தது ஏன்? சோனா விளக்கம்.

சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது.

குட் பேட் அக்லி வசூல் எப்படி ?
தெறி, 2026 ஏப்ரலில் ரீ ரிலீஸ்
‘இளையதளபதி’ விஜய் ஹீரோவாக நடிக்க ‘கலைப்புலி’தாணு தயாரிப்பில் உருவான படம் ‘சச்சின்’. கடந்த 2005 ஆண்டு வெளியானது’. சச்சின் வெளிவந்த அதே நாளில்தான், ரஜினியின் சந்திரமுகியும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ரிலீஸ் ஆனது. சந்திரமுகி ஒரு ஆண்டு ஓடியது. மும்பை எக்ஸ்பிரஸ் பெயிலியர்.சச்சின் ஆவரேஜ். இப்போது ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வசூலும் குவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தாணு தயாரிப்பில் விஜய் நடித்த ‘தெறி’
இரண்டு திருமணம் செய்துகொண்டது ஏன்? கமல் விளக்கம்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். அவரது வாழ்க்கை திறந்த புத்தகமாகவே இருந்துவருகிறது. கமல் 2 முறை திருமணம் செய்து கொண்டவர். முதலில் வாணி கணபதியை மணந்தார்.பிறகு இரண்டாவதாக சரிகாவை திருமணம் செய்துகொண்ட கமல்ஹாசன், அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். செய்தியாளர் ஒருவர் கமலிடம், ‘ நீங்கள் எதற்கு இரண்டு
தக் லைப் படத்தில் கமல் எழுதிய பாடல் வரிகள்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான இயக்குநர் மணிரத்னமும் ,‘உலக நாயகன் ‘கமல்ஹாசனும் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இன்றும் நாயகன் சிலாகிக்கப்படுகிறது.அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
ரவி மோகன், கார்த்தி சபரிமலைக்கு செல்லும் வழியில் கொச்சியில் சந்தித்தது யாரை ?
ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் , சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துவருகிறார்கள். அதுபோல் சினிமா நட்சத்திரங்கள் அதிகமானோர்வழிபட்ட தலமும் சபரிமலை தான். இவர்களுக்கு வழிகாட்டி, நடிகர் நம்பியார். ரஜினிகாந்த் உள்ளிட்டோரை , நம்பியார் சபரிமலைக்கு அழைத்து சென்றுள்ளார். நம்பியார் சாமி மறைந்து விட்டாலும்,இப்போதும்பல நடிகர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு நடிகர் ஜெயராமுடன் சென்று ஐய்யப்ப சாமியை தரிசனம்
பொன்னியின் செல்வனில் 300 இசைக் கலைஞர்களை பயன்படுத்திய ரகுமான்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மீது பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா, ஒரு புகாரை சொல்லி இருந்தார். ‘ஏ.ஆர்.ரஹ்மான் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் இசை அமைத்து வருகிறார். இதனால், பாரம்பரிய இசைக்கலைஞர்கள் பலர் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை வைத்து தனி ஆர்கெஸ்ட்ரா அமைத்து இசையை உருவாக்க வேண்டும்’ என்று அபிஜித் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘அபிஜித்தை நான் பெரிதும்
எஸ்.எஸ்.வாசன் முடிவை மாற்றச் செய்த என்.எஸ்.கே.
நாஞ்சில் நாடான நாகர்கோவில்காரர், என் .எஸ்.கிருஷ்ணன், 1935 -ஆம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்.எஸ்.கே. தனது படங்களில் நகைச்சுவை மூலம் சமூகத்திற்குதேவையாக கருத்துக்களை கொடுத்தவர்.நடிகர் விவேக்கின் மானசீக குரு. கலைவாணர் என்ற பட்டத்துடன்வலம் வந்தவர். என்.எஸ்.கிருஷ்ணன். ஜெமினி ஸ்டூடியோவில் அவருக்கு ஒரு
ரூ 5 கோடி கேட்ட இளையராஐவுக்கு பதில்.
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி’. கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் குவித்துள்ளது. இந்தப்படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’, ‘இளமை இதோ இதோ…’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது
அஜித் படம் ரூ 100 கோடி வசூலை தாண்டியது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘அல்டிமேட் ஸ்டார் ‘அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் கடந்த 10 – ஆம் தேதி வெளியானது. அஜித் படம், முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் ரூ.171.50 கோடி வசூலை
நல்ல பாடகர்கள் வாயப்பு இல்லாமல் உள்ளனர்- ஹாரீஸ் ஜெயராஜ் கருத்து.
‘மின்னலே ‘படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் , ஹாரிஸ் ஜெயராஜ்.இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்று இவரது இசையும் தனித்துவம் மிக்கவை. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில் நுட்பம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் இது: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் யாரும் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் இங்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.
மங்காத்தா 2 – வெங்கட் பிரபு விளக்கம்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘அல்டிமேட்ஸ்டார்’அஜித் நடித்து வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவில்லை. அஜித்தும், வெங்கட்பிரபுவும் மீண்டும் இணைந்து படம் பண்ண இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட்பிரபுவிடம், ‘மங்காத்தா 2’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த, வெங்கட்பிரபு, “’மங்காத்தா 2’ குறித்து தெரியவில்லை. ஆனால், அந்தப்படத்தின் மீது
ரஜினி, விஜயை முறியடித்தாரா விஜய் ?
ரஜினியின் ‘வேட்டையன் ‘,விஜய்யின் ‘கோட்’ ஆகிய படங்களை விட ,அஜித்தின் ‘ குட் பேட் அக்லி’ முதல் நாளில் வசூலை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித், திரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்புகிறது.இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.28.5
பிரபல ரவுடியை சுட்டுப் பிடிக்க போலீஸ் உத்தரவு.
மதுரையை சேர்ந்த பிரபல் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு. கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் துறை நடவடிக்கை.
விஜய் சேதுபதியுடன் நடிக்க சசிகுமார் ஒப்புதல்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட காலமாக உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் துரை செந்தில்குமார். இவர், ’எதிர்நீச்சல்’, ’காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். ’கருடன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து , ’லெஜண்ட்’ சரவணன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போகிறது. எப்போது முடிவடையும் என்பது செந்தில்குமாருக்கு தெரியவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை உடனடியாக
சிகரெட் பிடித்தது ஏன்? சோனா விளக்கம்.
2001 ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர், சோனா. பத்து பத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், வில்லி,காமெடி என அனைத்து கேரக்டர்களிலும் முத்திரை பதித்தவர். ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடர் தயாரித்து வருகிறார்.இது அவரது வாழ்க்கை வரலாற்று தொடர். 8 எபிசோடுகள். தனது வாழ்க்கையில் நடந்த இனிப்பான, கசப்பான அனுபவங்களை படமாக்கியுள்ளார். தனக்கு புகைப்பழக்கம்
சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது.
உலக அளவில் சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர். ஆண்டுதோறும் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர்,சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது இல்லை. 2028 – ஆம் ஆண்டு முதல் சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது. 2027-ல் வெளியான படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட படத்துக்கு சிறந்த
குட் பேட் அக்லி வசூல் எப்படி ?
‘ ‘அல்டிமேட்’ ஸ்டார் அஜித்குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அவருடன் திரிஷா , அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், கார்த்திகேய தேவ் பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, பிரசன்னா, ரகு ராம், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடித்துள்ளனர். அஜித்,ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்துப்போனது.இந்தியாவில் மட்டும் இந்தப்படம் நேற்று ஒரே
ரஜினியின் கூலி – ஓ.டி.டி. உரிமம் ரூ 120 கோடிக்கு விற்பனை.
கமல், விஜய், கார்த்தி ஆகியோருக்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள படம் ‘கூலி’. இது, ரஜினியின் 171-வது படம். ரஜினியுடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் என பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு .அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் என பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி
இளையராஜா இசைஞானி அல்ல- சீமான்.
ஓளிப்பதிவாளர்- இயக்குநர்- நடிகர்- தயாரிப்பாளர்- வசனகர்த்தா என தமிழ்சினிமாவில் பல தளங்களில் பயணிப்பவர் தங்கர் பச்சான். அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’.சிவபிரகாஷ் இயக்கியுள்ள இதில் அவர் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.இளையராஜா இசையமைத்துள்ளார் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,’பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்தப்
குட் பேட் அக்லி எப்படி இருக்கிறது ?
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி ‘படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ். ‘குட் பேட் அக்லி’ படத்தை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்த விமர்சனங்கள் இங்கே: கேரளா ரசிகர்கள்’’ இந்த படம்பிளாக்பஸ்டர்- இதுதான் படம். நாங்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் எங்களுக்கே படம் பிடித்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர். மங்காத்தாவிற்கு
திவ்யபாரதி என்ற தேவதையின் வாழ்க்கைப் பயணம்.
கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான’ நிலா பெண்ணே ‘என்ற தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. அவர் நடித்த முதலும் கடைசியுமான தமிழ் திரைப்படம் இதுவே.முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மகன், வி.தமிழழகன் இந்த படத்தை இயக்கி இருந்தார். கடந்த 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர், நிலா பெண்ணே படத்துக்கு பிறகு, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் வெங்கடேஷ்,
அருண் விஜய்க்காக தனுஷ் பின்னணி பாடியது ஏன்?
அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில், அவருக்காக பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். .தான்யா ரவிச்சந்திரன், சித்து இதனானி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். அவரது இசையில் அருண் விஜய்க்காக , தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இந்தப்பாடலை வெளிநாட்டில்
தமன்னாவின் ஆன்மீக அனுபவம்.
யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமன்னா ஆன்மீகம் குறித்து பேசினார். அவரது ஆன்மீக அனுபவம் இது: பிரபலமாக இருப்பதன் புகழும், அழுத்தங்களும் ஒரு நபரின் மனநிலையை ஒருகட்டத்தில் பாதிக்கலாம். எல்லாவற்றையும் பெரிதுபடுத்தி, பதில்கள் உடனடியாகக் கிடைக்கும் சமூக ஊடகங்களின் சகாப்தத்தில் அது இன்னும் மோசமாகிவிட்டது. இதுபோன்ற காலங்களில், பிரபலங்கள் குழப்பத்தை அவர்கள் உண்மையிலேயே வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ்வது முக்கியம். “ஈஷா யோகா மையத்தில் நான் எடுத்த திட்டங்கள் உண்மையில் வேலை
பல்கலக்கழகங்களில் இனி ஆளுநர் தலையிட முடியாது. ஏன் ?
தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு. “குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம்..!” உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு. “எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல். உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன? 1.தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: துணைவேந்தர்கள்
ரகுவரன் வாழ்க்கை ஆவணப்படமாகிறது.
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ரகுவரன், ஹீரோ, வில்லன், குணசித்திரம் என தனக்கு வாய்த்த அனைத்து பாத்திரங்களை கச்சிதமாக செய்தவர். பாட்ஷாவும், பூவிழி வாசலிலே படமும் அவரது மாஸ்டர் பீஸ் படங்கள்.நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார்.போதை பழக்கம் உண்டு. 2008 ஆம் ஆண்டு காலமானார். ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் ,ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார்.இதற்கு ‘ரகுவரன்:
தமிழில் கடந்த மூன்று மாதங்களில் 72 படங்களில் 4 படங்கள் மட்டுமே வெற்றி !
2025 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பொற்காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்த 3 மாதங்களில் தமிழ் சினிமாவில் 72 படங்கள் வெளி வந்துள்ளன. இதில் 4 படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைத்து தரப்பும் பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் ‘விடா முயற்சி’ , போட்ட முதலீட்டில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை.. எனினும், சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட