படத்தை அடுத்து விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் இரண்டாவது படமான ‘லியோ’ 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிர்மாண்டமாக தயாராகியுள்ளது. இன்னும் 6 நாட்கள் தலக்கோணத்தில் ஷுட்டிங் நடத்தி விட்டால் படத்தின் ஆயுத பூஜை  தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டம். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் . கேங்ஸ்டர் படமான லியோவில் இந்தி நடிகர் சஞ்சய்தத், அர்ஜுன்,மன்சூரலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ,பாபு ஆண்டனி ஆகியContinue Reading

கதாநாயகர்களின் பிம்பத்தை கட்டமைப்பதில் தூண்களாக இருப்பவர்கள் வில்லன்கள். சினிமாக்களில் எதிர்மறை கதாபாத்திரங்களின் வலிமையும், கொடுமையும்தான், ஹீரோக்களை,ரசிகர்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு செல்கிறது. எம்.ஜி.ஆருக்கு நம்பியார். ரஜினிக்கு ரகுவரன். அதுபோல் பிரகாஷ்ராஜ், பல நாயகன்களின் வெற்றிக்கும், படங்களின் வசூலுக்கும் பிரதான காரணமாக இருந்துள்ளார். அந்த படங்கள் குறித்த சின்ன தொகுப்பு: ஆசை. கே.பாலசந்தரின் மாணவரான வசந்த், வணிக ரீதியாக கொடுத்த பெரிய வெற்றிப்படம் ஆசை. அஜித்தை, உச்சத்துக்கு உயர்த்திய படமும் இதுவே.Continue Reading

காலத்தால் அழியாத பாடல்களை தந்த மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் 95 வது பிறந்தநாள், இன்று. கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜுன் 24 ) பிறந்த, எம்.எஸ்.விசுவநாதன், தனது 4 வயதிலேயே தந்தையை இழந்தவர். தாத்தா கிருஷ்ணன் நாயர்,கண்ணனூர் சிறையில் வார்டனாக இருந்ததால், எம்.எஸ்.வி.குடும்பம் கண்ணனூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை கற்ற எம்.எஸ்.வி. 13வயதிலேயே மேடைக்கச்சேரிContinue Reading

தமிழர் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 96 ஆவது பிறந்தநாள், இன்று. எழுத்தாளர்,கவிஞர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்,மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்,கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த சாத்தப்பா- விசாலாட்சி தம்பதியின் எட்டாவது குழந்தை கண்ணதாசன். சிறு வயதிலேயே பழனியப்பன் -சிகப்பி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்து கொடுக்கப்பட்ட அவர், பெற்றோர் தனக்கு சூட்டிய முத்தையா எனும் பெயரை பிற்காலத்தில் கண்ணதாசன் என தத்தெடுத்துக்கொண்டார். பிஞ்சுContinue Reading

ஆதரவற்று உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்து வரும் சமூக சேவகருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை நடிகர் ரஜினிகாந்த பரிசாக வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக ஆதரவில்லாமல் அனாதையாக இறந்துவிடுகிறவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனைப் பற்றி விசாரித்து அவருக்கு தேவைப்படும் ஆம்புலன்சுக்கான முழு பணத்தையும் ஷோ ரூம் ஒன்றில் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தContinue Reading

இயக்குநர்களுக்கு உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு.அதனை சரியாக பயன்படுத்தியவர்கள், புகழோடு காசும் பார்த்து விடுகிறார்கள். தவற விட்டோர், சுலபாக மீள்வதில்லை. இந்த பட்டியலில் இடம் பெறுவோரில் முக்கியமானவர் வசந்த். கே.பாலசந்தரின் மாணவர். கேளடி கண்மணி, ஆசை ஆகிய அற்புதமான சினிமாக்களை தந்தவர். பாலசந்தர் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் வசந்தைத்தான் தேடி வந்தது. பத்திரிகைகளில் விளம்பரமும் வந்து விட்டது. ரஜினியுடன் ஏற்பட்டContinue Reading

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – லலித் குமார் தயாரித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் லியோ. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜயுடன் சேர்ந்து அனிரூத் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளனர். நடிகர் விஜயின் பிறந்த நாளான இன்று அதிகாலை 12 மணியளவில் லியோ படத்தின் முதல்Continue Reading

நடிகர் விஜயின் 49- வது பிறந்த நாளை அவருடை ரசிகர்கள் விருப்பப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்தனர் , பல இடஙகளில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ராசிபுரம் அடுத்த காக்காவேரி என்ற இடத்தில் தனியார் பெட்ரோல் பங்கில் 1 லிட்டர் டீசல்க்கு 3 ரூபாய் மற்றும் 1லிட்டர் பெட்ரோல்க்கு ரூ.2.50 பைசா தள்ளுபடி கொடுப்பது நடந்தது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல் போடுவதற்கு கூட்டம்Continue Reading

“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை. டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகைளை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது. நேற்று ( புதன்) இரவு பத்து மணிக்கு மூடப்பட்ட அந்த 500 கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகளில்  உள்ள மதுப்பாட்டிகள் மற்றைய பொருடகள் ஒரு வாரத்தற்குள் அப்புறப்படுத்தப்படு்ம் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படிContinue Reading

வடிவேலுவை நாயகனாக வைத்து இம்சை அரசன் 21 ஆம் புலிகேசி படத்தை தயாரித்தவர் இயக்குநர் ஷங்கர். இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்த ஷங்கர், வடிவேலுவின் இம்சையால் படத்தை பாதியிலேயே கைவிட நேர்ந்தது. இப்போது நான் சொல்லப்போகும் விஷயம், இம்சை அரசன் குறித்து அல்ல. இந்தியன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து, ஷங்கர் அனுபவித்த இம்சைகளை. 1996 -ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை , இந்தியன் -2 எனும்Continue Reading