ஆகஸ்டு,04- தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கடிகாரம் போல் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். இந்தியன் -2 வும், கேம் சேஞ்சரும் தான் ,ஷங்கரின் இப்போதைய மூச்சு. மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதையில் மூழ்கி கிடக்கிறார். இருவருமே தமிழ் சினிமாவை இந்தியாவை தாண்டி கொண்டு சென்றவர்கள். எந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் சக டைரக்டர்களுடன் ஒரு பொன்மாலைContinue Reading

ஆகஸ்டு, 05- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து தன்னுடைய 50- வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அடுத்து தனுஷ் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. என்ன படம்? அந்த படத்தை இயக்க உள்ள ஆர்.பால்கிContinue Reading

ஆகஸ்டு.04- பீட்சா’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். இதனை தொடர்ந்து டைரக்ட் செய்த ஜிகிர்தண்டா , இறைவி போன்ற படங்களால், கவனம் ஈர்த்தவர். ரஜினிகாந்தின் ரசிகர். அவரை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கினார். அவருக்கும் ,ரஜினிக்கும் பெரிய வெற்றிப்படமாக, ’பேட்ட’ அமைந்தது. இப்போது ‘ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாவது பாகமான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில்  ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.Continue Reading

ஆகஸ்டு, 04- கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார் , ரஜினிகாந்த். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறும்  விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என முன்னிறுத்தும்  வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஒரு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார்,’அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என பிள்ளையார் சுழி போட்டார். வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜு, தனது பட விழாவில் பேசும் போது,’விஜய்தான் சூப்பர்ஸ்டார்’என வழி மொழிந்தார். ஜெயிலர் பட விழாவில்,Continue Reading

ஆகஸ்டு,03- சினிமா ஆசையில் வாழ்க்கையை தொலைத்து, இறுதி நாட்களில் வறுமையில் உழன்று மரணிப்பது கோடம்பாக்கத்தில் சகஜமாகி விட்டது.அவர்களில் ஒருவர் மோகன். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மோகன், சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ’குள்ள’ கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். நான் கடவுள், அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்துள்ளார். திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் 60 வயதான மோகன் சொந்த ஊருக்குContinue Reading

ஆகஸ்டு,02- காதலை சுவையாக சொல்லி இருந்த படம் மின்னலே’. இந்தப்படத்தின் மூலம் தான் கவுதம் வாசுதேவ் மேனன் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அவர் இயக்கத்தில்  2003- ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் காக்க காக்க. கவுதமுக்கு இது இரண்டாம் படம். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும்Continue Reading

ஆகஸ்டு,2- தாதா 87′ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு  ’மைக்’ மோகன் மீண்டும் நடிக்கிறார். குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். , வனிதா விஜயகுமாருக்கு இதில்Continue Reading

ஆகஸ்டு,2- இந்தி நடிகை கங்கனா ரனாவத் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் இயங்கி கொண்டிருப்பார். தமிழில் ‘சந்திரமுகி -2 ‘படத்தில் இப்போது நடிக்கிறார். மும்பையை, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு இவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அங்குள்ள அரசியல்வதிகள் கோபத்துக்கு ஆளானார். தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் இருந்தது. இதனால் அவருக்கு மத்திய அரசு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. தனது இருப்பை பதிவு செய்து கொள்வதற்காக அவ்வப்போது வாய்Continue Reading

அதிக சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியலை ஜும் தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குசொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. நாகார்ஜுனா ஒரு படத்துக்கு 20 கோடிரூபாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துசேர்ந்தது?Continue Reading

ஆகஸ்டு, 01- கடந்த 1994 ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக( மிஸ் யுனிவர்ஸ்) தேர்வு செய்யப்பட்டவர் சுஷ்மிதா சென். உலக அழகி ஐஸ்வர்யா ராயை போல் , சுஷ்மிதாவை தேடியும் சினிமா வாய்ப்பு வந்தது. ’தஸ்தக்’ என்ற இந்திப்படம் மூலம் நடிகையானார். தமிழில் ‘ரட்சகன்’ படத்தில், நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அற்புதமான பாடல்கள் இடம் பெற்றிருந்தும், அந்தப்படம் ஓடவில்லை. பின்னர் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.Continue Reading