June 17, 23 நடிகர் விஜய்யின் கைகளால் பரிசு பெற வந்த மாணவர்களுக்கு தலையணை, போர்வை கூட விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கி பாராட்டியது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நேற்று இரவு படுக்க பாய், போர்வை, தலையணை என எதையுமே கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. நடிகர்Continue Reading

June 17, 23 தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும்Continue Reading

June 17, 23 எஸ்ஜி சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர காவல்Continue Reading

தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். தச்சங்குறிச்சி 4 – வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55), கூலித்Continue Reading

June 17, 23 அம்பேத்கர் உள்ளிட்ட சமூகநீதி தலைவர்களை படியுங்கள் என மாணவர்களுக்கு நடிகர் விஜய் வழிகாட்டியிருப்பதற்கு எனது பாராட்டுக்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதிContinue Reading

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்ட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்குமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் கடந்த 7-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்பது சூர்யாContinue Reading

சென்னை, ஜுன் 17, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டு உள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள அவர் அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கலால் ஆயத் தீர்வையை கூடுதலாக அமைச்சர் முத்துசாமி கவனிப்பதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல்Continue Reading

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளதால் சர்ச்சை வலுத்து உள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கலால் ஆயத் தீர்வையை கூடுதலாக அமைச்சர் முத்துசாமி கவனிப்பதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். ஆனால் எந்த துறையும் இல்லாமல் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார். இதனால் அவரை இலாகா இல்லாதContinue Reading

காவல் துறையின் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இந்த பரபரப்பு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது  பாதுகாப்புப் பணிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜேஷ் தாஸ்  சகContinue Reading

ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading