May 31, 2023   மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபடுவதாக அறிவித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, அம்மாநிலContinue Reading

May 31, 2023 மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக துணைமுதல்வர் சிவக்குமார் பேச்சுக்கு மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை , வருவாய்த்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 97 பயனாளிகளுக்கு 1 கோடியே 72 லட்சம்Continue Reading

மே.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் மரணமடைந்தது தொடர்பாக தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென அவரது தாயார் செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து அந்தப்Continue Reading

May 30, 2023 சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கருத்து உண்மை என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப குழந்தை திருமணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை வழங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில வாரங்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்குContinue Reading

May 30, 2023 அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திரு.பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்Continue Reading

மே.30 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 27ம் தேதி நுழைந்த அரிக்கொம்பன் யானை தாக்கியத்தில் காயமடைந்த பால்ராஜ் என்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ‘அரிக்கொம்பன்’ என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்குள்ள ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்திContinue Reading

May 29, 2023 அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது, இந்த வீட்டை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில், வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாகContinue Reading

May 29, 2023 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, பாடப் புத்தக விநியோகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 4Continue Reading

மே.29 தமிழகத்தில் நடைபெற்ற விஷசாராய மரணங்கள், சட்டம்ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயணம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதேபோல், திமுக ஆட்சியில் தமிகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டContinue Reading

மே.29 போக்குவரத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று காலை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்தியாவின் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளானது, புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வதுContinue Reading