மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்  வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, மாநில தலைவரை உடனடியாக மாற்றிவிட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லிபறந்து சென்று அங்கு முகாமிட்டு உள்ளார். அழகிரி தலைவராக பதவி ஏற்றுContinue Reading

ஜூன் – 27 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை எனச் சொல்லப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவைContinue Reading

ஜூன் – 27 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருக்கிறார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகContinue Reading

ஜூன் – 27 மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சதாப்தி எக்ஸ்பிரஸை போல அதிவேகமாக செயல்படும் ரயில் சேவையாகும். இந்த வந்தே பாரத் ரயில்களை இப்போதைய பாரதContinue Reading

ஜூன்,26. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை போலிஸ் துணையுடன் அதிகாரிகள் அகற்றியபோது பதற்றமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கையில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் ஆனித் தரிசனம் நடைபெறுவதற்கு முதல் நாள் தீட்சிதர்கள் திடீரென கனகசபை மீது ஏறிவந்து பக்தர்கள்Continue Reading

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த  சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுகனேஸ்வர் கோயிலில்  ஆகமத்தின் அடிப்படையின் ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளContinue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847.கடந்த ஆண்டை விட 18 ஆயிரத்து 767 பேர் அதாவது 11.09% கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.Continue Reading

ஜுன் 26, முதலமைச்சரிடமும் மதிமுக தலைவர் வைகோ விடமும் தனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளதாக மதுரை மாமன்ற கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி 19 -ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு தனது தொகுதியில் பணிகள் முறையாக நடைபெறவில்லைContinue Reading

ஜுன்,26- ’ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை பாடியதால் இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டதாக பாடகி மின்மினி தெரிவித்துள்ளார். 1992ஆம் ஆண்டு வெளியான ‘மீரா’ படத்தின் மூலம் இளையராஜாவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி மின்மினி. அதன் பிறகு ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாசறு பொன்னே வருக’ என்ற பாடலை பாடகி ஸ்வர்ணலதாவுடன் சேர்ந்து பாடியிருந்தார். 1992ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’Continue Reading