June 12, 23 தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் மத்தியில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்துContinue Reading

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்; பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்புரமணியன் தெரிவித்து உள்ளார் சென்தி்னையில் பேட்டியளித்த அவர்,  மத்திய அரசின் புதிய நடவடிக்கையால்  மருத்துவ கல்வி இடங்களை அதிகம் வைத்துள்ள தமிழ்நாட்டுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றார். பொது கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும்  என்றும்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Continue Reading

பாரதீய ஜனதா கட்சி முன் வைக்கும் விமர்சனங்கள் அனைத்துக்கும் உடனுக்கு உடன் பதில் சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்வதில்லை என்று வலைதளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது சென்னை மற்றும் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசினார் அப்போது அவர்,Continue Reading

June 11, 13 தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாஜக அரசின் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களைContinue Reading

June 11, 13 சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்தContinue Reading

Jun 11, 23 அளவுக்கு அதிகமாக மாசு அடைந்து குடிக்கும் தகுதியை இழந்த தாமிரபரணி ஆற்றில் தூய்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றுநீர் மிக மோசமாக மாசு அடைந்திருப்பதாக தனியார் செய்தித் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சர்வதேச தர குறியீட்டுடன் ஒப்பிடும்போது தாமிரபரணிContinue Reading

June 11, 13 அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிடமாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தடைந்தார். இன்று சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலத்தில் ஸ்மார்ட்Continue Reading

June 11, 13 தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம், அதற்கு காரணம் திமுக தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர். இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறைContinue Reading

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு நேற்று பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால், காலை 8.30 மணிவரை வரவில்லை. பால் விநியோகம் தாமதமானதாலும், ஆவின் பால் கிடைக்காததாலும் தனியார் பாலை பெரும்பாலான மக்கள் வாங்கிச் சென்றனர். வெளி மாவட்டங்களில் இருந்துContinue Reading

June 10, 23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட இந்தக்குழு கூட்டம் 3வது முறையாக நடைபெறவுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்தும், வருவாய் அதிகரிக்கவும், மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகளை வழங்கவும் இந்த திட்டக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 3வது முறையாகContinue Reading