செப்டம்பர்,14- கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கும், ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொது மக்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வெறும் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்க முடியாது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கச்சேரி நடந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அமரமுடியும். ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். அளவுக்கு அதிகமானContinue Reading

செப்டம்பர்,12- இசைப்புயல் ஏஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைநிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த மாதம் 12-ம் தேதிநடப்பதாக இருந்தது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட அந்த நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ’ ரசிகர்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும்’என்று ரகுமான் அறிவித்திருந்ததால் , டிக்கெட் வாங்கிய பல அயிரம் பேர்இசை நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.Continue Reading

செப்டம்பர்,08- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாக சினிமாவில் இருந்தார். கதை- வசனங்கள் எழுதினார். பாரதிராஜா உள்ளிடோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பஞ்சாலங்குறிச்சி என்ற படம் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்தார். சில படங்களில் நடித்தும் உள்ளார். அந்த கால கட்டத்தில், நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.கல்யாணம் செய்து சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்Continue Reading

செப்டம்பர்,08- தென்காசி மாவட்டத்தில்  மட்டுமல்ல தென் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் மையமாக இருப்பது,குற்றாலம். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சீசன் காலம் ஆகும்.குளிர் தென்றலோடு ஒட்டி வரும் சாரல் துளிகள் மனதுக்கும், உடலுக்கும் இதமளிப்பவை. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் சீசன் களை கட்டவில்லை.அருவிகளில் எப்போதவது மட்டுமே தண்ணீர் கொட்டியது.வெயிலும் சுட்டெறித்தது. வெளியூர்களில் இருந்துவந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்Continue Reading

செப்டம்பர்,07- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை செயல்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபோது திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அன்றைய தினம் சென்னை தி.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,’12 மணிக்கு ஒருவன் சரக்கு வாங்கி, அதன் பின்னர் பாட்டிலை திறந்து, மிக்ஸ் செய்து அடித்து விட்டு, வீட்டுக்கு சென்று சாப்பிட்டுContinue Reading

செப்டம்பர் 05- எம்.ஜி.ஆர்.ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கைக்குள், கிட்டத்தட்டமுழுதாக வந்து விட்டது.பிரதமர் மோடியின் பக்கத்தில் நாற்காலி போடப்பட்டு அவர் அருகே அமரும் நிலைக்குஈ.பி.எஸ். அந்தஸ்து வளர்ந்து விட்டது. மதுரை அதிமுக மாநாட்டில் தனது செல்வாக்கை காட்டிய பெருமிதத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். மதுரை மாநாடு, மக்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறியும் பணியை, உளவுத்துறையில் பணியாற்றிContinue Reading

செப்டம்பர்03- ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வடிவமைத்துள்ள‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் 3 வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. ‘தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தோழமை கட்சிகள் ஓரிரு வாரங்களில் முடிக்க வேண்டும்’ என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே.வங்காளம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்காது.தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும்.கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட தொகுதிகளையேContinue Reading

செப்டம்பர்,03- விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுகடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் , ’சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ எனபுகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீதுContinue Reading

செப்டம்பர்,02- ஓவியத்துக்கும்,சிற்பத்துக்கும் விழிகள் எவ்வளவு முக்கியமோ அது போல் திரைப்படங்களுக்கு ‘டைட்டில்’ பிரதான அம்சம்.பொறுக்கி பொறுக்கி அந்த காலத்தில் தலைப்பை தேர்வு செய்தார்கள், இயக்குநர்கள். இப்போதைய இயக்குநர்கள் பொறுக்கி டைட்டிலை தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவர்கள் வைத்த டைட்டிலை கொஞ்சம் கூட ‘ லஜ்ஜை’ இல்லாமல் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்கிறார்கள். தொழில் நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை அறிமுகம் செய்த கமல்ஹாசனும் இதற்கு விதி விலக்கல்ல. டெக்னிக்கல் விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, குள்ளContinue Reading

செப்டம்பர்,01- கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.இந்த நிலையில் 11 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கை தாமாக முன்Continue Reading