ஆகஸ்டு,07- அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தியும் பலனில்லாமல் போய்விட்டது. அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்ட்டு இருக்கும் செந்தில் பாலாஜி இன்றே காவலில் எடுத்து விசாரணை நடத்த  ஆயத்தமாகிவிட்டது அமலாக்கத்துறை. வருகிற 12- ஆம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் போதுContinue Reading

ஆகஸ்டு,07- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. கட்டுமானத்துக்கு தேவையான தகரம் முதல் தங்கம் வரை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழா நடை பெறுகிறது. ராமர் கோயிலுக்கு சத்ய பிரகாஷ் சர்மா என்பவர், வித்தியாசமான நன்கொடையை வழங்க முடிவு செய்துள்ளாரஇவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை. சேர்ந்தவர் ,பூட்டு தயாரிக்கும் கலைஞர். தனதுContinue Reading

ஆகஸ்டு,06- சென்னை மதுரவாயலில் இருந்து  ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் ₹3,500 கோடி செலவுப்  பிடிக்கும் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள மேடை (center median) மீது  தூண்கள் எழுப்பப்பட்டு அதன் மீது இந்தContinue Reading

ஆகஸ்டு, 06- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக புகார் கூறப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டது. ஒன்றரை வயதான தஸ்தகிர் என்ற இந்த குழந்தை கடந்த மாதம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அப்போது குழந்தையின் கை அழுக ஆரம்பித்ததால் அந்த கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்Continue Reading

ஆகஸ்டு,06- தமிழக காங்கிரஸ் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில காங்கிரஸ் தலைவரை  மாற்றுவதை கட்சி மேலிடம் வழக்கமாக வைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக கே.எஸ். அழகிரி, தலைவர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்திருப்பது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கும் சில எம்.பி.க்களும் அதிருப்தியில் இருந்தனர்.மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்தனர். இந்த விவகாரம்Continue Reading

ஆகஸ்டு, 04- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன். கோயில் பூசாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பொங்கியண்ணன்  மனைவி தங்கமணி . விதவையான அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில்,”ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்தContinue Reading

ஆகஸ்டு.04- திருநெல்வேலி  டவுன் காவல்நிலையத்தில் உதவி  ஆணையராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பகுதிக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். நெல்லையப்பர் கோயிலில் இருந்து  ஆர்ச் வரை உள்ள ஒரு வழி பாதையில் அவரது வாகனம் சென்றது. அது, ஒரு வழிப்பாதை என்பது சுப்பையாவுக்கு நன்றாக தெரியும். விதியை  மீறுகிறோம் என்பதும் தெரியும். அவரது கெட்ட நேரம் , காவல்துறை ஆணையர் வடிவத்தில் வந்தது.Continue Reading

ஆகஸ்டு,03- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, நிறைவேற்றிய திட்டங்களில் அடித்தள மக்கள் பலன் அடைந்த மகத்தான திட்டம்- ’அம்மா உணவகம்’. ஏழை-எளிய மக்கள் பசியால் துவளக்கூடாது எனும் நோக்கில் கடந்த 2013-ம் ஆண்டு  இதனை கொண்டு வந்தார்.  காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக  சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அன்றாடம்Continue Reading

ஆகஸ்டு,02- ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும்  தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத் எந்த நேரத்திலும் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கேட்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ரவீந்திர நாத் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பெண் ஒருவர்,சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாருதான் இதற்கு காரணம். செங்கற்பட்டு அடுத்து உள்ள ஏகாடூரில் வசிக்கும்Continue Reading

ஆகஸ்டு, 01- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் வானத்தில் தென்பட்டது பறக்கும் தட்டு கள் என்ற தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான படங்களை தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரதிப் வி பிலிப் வெளியிட்டதை அடுத்து விசாரணைகள் உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த புதன் கிழமை வானத்தில் பளிச்சென்ற ஒளியுடன் கூடியContinue Reading