ஜுலை, 23- தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோது,மதுரையில் இருந்து வெள்ளித்திரையில் தலை காட்டுவதற்காக கோடம்பாக்கம் வந்தவர் விஜய்காந்த். சினிமாவில் நடிக்கத் தொடங்கி,படிப்படியாக முன்னேறி, பல இயக்குநர்கள் செதுக்கிய பின் உயர்ந்த இடத்துக்கு வந்த விஜயகாந்த், திடீர் என கட்சி ஆரம்பித்து  தலைவர் ஆகிவிட்டார்.தனியாக நின்று எம்.எல்.ஏ.தேர்தலிலும் ஜெயித்தார். அப்போதெல்லாம் கமல் நேரடியாக அரசியல் பேசவில்லை.அவர்,  தமிழக அரசியல் ஆளுமைகளான கலைஞரும்,ஜெயலலிதாவும் மறைந்த பின் ’மக்கள் நீதி மய்யம்’Continue Reading

ஜுலை, 22- தமிழக அரசு முதியோருக்கான  ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகை ஆகியவற்றை ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ஆக அதிகரித்து உள்ளது. ஆகஸ்டு மாதம் முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸடாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது…Continue Reading

ஜூலை, 22- தேர்தல் வாக்குறுதியில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் இப்போது டோக்கன் முறையில் விநியோகித்து வருவது கண்டனத்திற்கு உரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கான தீர்மானக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்Continue Reading

தமிழ் நாட்டைச் சேர்ந்த குறவர் இன பெண்களை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்து பிறப்பு உறுப்பில் மிளகாய்த் தூள் தடவிஆந்திர போலீசார் வெறித்தனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது. இந்த கொடூரச் செயலை செய்த ஆந்திரா காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறையினர் உடந்தை என்பது புகார் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராமத்ததில் வசிக்கும் குறவர் இன மக்களில்Continue Reading

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் 18 பேருக்கு தலா 7 வருடம் சிறைத் தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்து உள்ளது. கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது இடிந்தகரை என்ற மீனவர் கிராமத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் இந்த போராட்டத்தைContinue Reading

ஜுலை,21- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே , எந்த பிரச்சினையிலும் வாய் திறப்பதில்லை. எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக வந்தபின், மாஜிக்கள், மாவட்டங்கள் என எல்லோருமே பொளந்து கட்டுகிறார்கள்.பலரின் பிதற்றல்களும்,உளறல்களும் பொடியன்கள் கூட பரிகாசம் செய்யும் அளவுக்கு எல்லை மீறி போய் விடுகிறது. சம்மந்தமில்லாமலும், சர்ச்சையாகவும் பேசுவதில் இன்றைக்கு அதிமுகவில் நம்பர் -1 ஆக இருப்பது திண்டுக்கல் சீனிவாசன்.Continue Reading

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்ய இருந்த பாதையில் அரசு பேருந்து விபத்தில் சிக்கியதால் போலிஸ் அதிகாரிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 25 ஜி என்ற எண் கொண்ட பேருந்து காலை 11: 40 மணி அளவில் அண்ணா சதுக்கத்தில் புறப்பட்டு அண்ணா மேம்பாலம் வந்து கோடம்பாக்கம் செல்வதற்கு கீழே இறங்கும் போது பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்கு ஆளானது. சுவரில் சிக்கிக்Continue Reading

அமைச்சர் பொன்முடி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேலும் 5 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. செம்மண் குவாரிகளை பொன்முடி தனது பினாமிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 28 கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டது என்பது வழக்காகும்.இது தொடர்பாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில்Continue Reading

ஜுலை, 20- தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஒப்பந்தத்தை பதிவுத்துறை ரத்து செய்துள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் நயினார் பாலாஜி மீது இது தொடர்பாக குற்றம்Continue Reading

சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், நெஞ்சு வலி ஏற்பட்டதால் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  பைபாஸ் இதய அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் ஒரு மாத காலம் சிகிச்சையில்Continue Reading