பெரிய நடிகர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ ஏதாவது ஒரு பட்டத்தை தங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு, அவர்களின் தீவிர ரசிகர்கள் சூட்டி அழகு பார்ப்பது தமிழ் சினிமாவின் இலக்கணமாகி விட்டது.சில நேரங்களில் நடிகர்களால் லாபம் பார்த்த விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ ஒரு ( தம்)பட்டத்தை, நடிகர்கள் தலையில் வைத்து விடுவார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார்,உலகநாயகன், புரட்சி கலைஞர்,புரட்சி தமிழன், சுப்ரீம் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் இப்படித்தான்Continue Reading

ஆகஸ்டு – 28 அல்டிமேட் ஸ்டார் அஜித், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புதிராகவே இருந்து வருகிறார். பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் பேட்டி அளிப்பதில்லை. தான் நடிக்கும் பட விழாக்களிலும் பங்கேற்பதில்லை.பொது வெளியில் தோன்றுவதையும் தவிர்த்து வருகிறார். திடீரென்று வெளிநாடுகள் செல்கிறார்.அங்கு போய் பைக் ஓட்டுகிறார்.அஜித்தின் சாகசங்களை,அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, பத்திரிகைகளுக்கு அவ்வப்போது கொடுக்கிறார். அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆகி 8 மாதங்கள் கடந்து விட்டன.Continue Reading

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தைContinue Reading

பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை. இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய்Continue Reading

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், அதிமுக vs திமுக என்ற நிலை மாற வழியே இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமியே என்று கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், உப்புக்கு சப்பாக தான் அந்தContinue Reading