ஆகஸ்டு, 25- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்  எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதை அடுத்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக  பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வத்தை கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பிறகு அதிமுக பொதுச் செயளாலராகContinue Reading