ஏப்ரல்.24 கோவை – அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இதுவரை 280க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.Continue Reading