மே.23 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட 5500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Continue Reading