மே.31 சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தமிழகம் திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளா்களை அழைப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான்Continue Reading

மே.25 சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வது லட்சம் என தெரிவித்த நிலையில், அதனை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர்,Continue Reading

9 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். விமானம் ஏறும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அதன்Continue Reading

மே.22 தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில்துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்குContinue Reading