*எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெண்டர் விடுவதில் ரூ 4800 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது வழக்கு. *மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தேர்வு … மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறுContinue Reading

செப்டம்பர்,11- கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளுக்கு எப்போதுமே ஜுனியர் பார்ட்னர்களால் தொல்லை தான்.பீகாரில் ‘இந்தியா’கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கும், ஆர்.ஜே.டி.தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும், தோழமை கட்சிகளால் கூடுதல் இம்சை உருவாகியுள்ளது. பீகாரில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் நிதிஷ்  கட்சி கூட்டு வைத்திருந்தது.லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் இவர்களுடன் இருந்தார். மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 39 இடங்களைContinue Reading

செப்டம்பர்,11- களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டசம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய். அவரைப்போல் இன்று உச்ச நடிகர்களாக ஜொலிப்போர்,அதைக்காட்டிலும் கொஞ்சம்அதிகம் வாங்கி இருப்பார்கள். இப்போது அந்த நட்சத்திரங்களின் ஊதியம் நூறு கோடிb ரூபாயில் ஆரம்பிக்கிறது. படம் ஓடினால்,ஆட்டோக்காரர்களுக்கு பயணிகள் தருவது போல் , தயாரிப்பாளர்கள் ‘போட்டு ‘கொடுப்பார்கள். பெரிய பட்ஜெட் படங்களின் பாதிச்செலவு, நடிகர்களுக்கான சம்பளத்தில் போய் விடுகிறது. நிஜ நிலவரம் இப்படி இருக்க, நடிகர்Continue Reading

செப்டம்பர்,09- முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைலையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் வலுவான கட்சியாக இருந்தது. தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.அங்கு பாஜக, கால் ஊன்றிய பின் , தேவகவுடா கட்சி கட்டெறும்பாகி விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்விஅடைந்தது. இருப்பினும் ’மக்களவை தேர்தலில் நாங்கள் தனித்தே நிற்போம்-, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை –ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும்Continue Reading

செப்டம்பர்,09- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பெரும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் வாசு டைரக்‌ஷனில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் உள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி  திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 15-ஆம்Continue Reading

*டெல்லியில் நாளை ஜி- 20 மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் .. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலியா பிரதமர் அல்பான்சி உட்பட பல நாட்டுத் தலைவர்கள் வந்து சேர்ந்தனர் *முதன் முதலாக இந்தியா வந்த பைடனுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு… ஓட்டலுக்குச் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு *அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை ..இருContinue Reading

செப்டம்பர்,08- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாக சினிமாவில் இருந்தார். கதை- வசனங்கள் எழுதினார். பாரதிராஜா உள்ளிடோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பஞ்சாலங்குறிச்சி என்ற படம் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்தார். சில படங்களில் நடித்தும் உள்ளார். அந்த கால கட்டத்தில், நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.கல்யாணம் செய்து சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்Continue Reading

செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

செப்டம்பர்,08- தென்காசி மாவட்டத்தில்  மட்டுமல்ல தென் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் மையமாக இருப்பது,குற்றாலம். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சீசன் காலம் ஆகும்.குளிர் தென்றலோடு ஒட்டி வரும் சாரல் துளிகள் மனதுக்கும், உடலுக்கும் இதமளிப்பவை. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் சீசன் களை கட்டவில்லை.அருவிகளில் எப்போதவது மட்டுமே தண்ணீர் கொட்டியது.வெயிலும் சுட்டெறித்தது. வெளியூர்களில் இருந்துவந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்Continue Reading

*பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான சானதன கோட்பாடு பற்றிதான் உதயநிதி பேசினார் … பிரதமர் மோடி, உதயநிதி சொன்னதை முழுமையாக அறியாமல் பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை. *பாஜகவுக்கு வந்துள்ள சனாதன கோட்பாடு மீதா பற்று அல்ல,எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உபி அரசு வழக்குப் பதியவில்லை என்றும் விளக்கம். *சனாதனம் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறிContinue Reading