மே.5 மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்துContinue Reading