ஜுலை, 30- இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி பெருக்கெடுத்து ஓடுவதால் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த ஆற்றின் குறுக்கே உள்ள தபலேஸ்வரன் அணையில் இருந்து விநாடிக்கு 15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கோதவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த ஆண்டில் இது  இரண்டாவது முறையாகும். கடந்த மாத வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அல்லூரிContinue Reading

வடமேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழையும், சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு. வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை – இந்திய வானிலை ஆய்வு மையம்.Continue Reading

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாகும். அரபிக்Continue Reading

ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.Continue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லிContinue Reading

மே.24 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 27ஆம்Continue Reading

மே.18 தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் உச்சமடைந்துள்ள நிலையில், வேலூர், திருத்தணி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துவருகிறது. ஒரு சில இடங்களில் இலேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்துவருகிறது. இருப்பினும், கடந்த 3 நாட்களாக காலை முதலேContinue Reading

மே.10 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.Continue Reading

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

மே.3 தமிழகத்தில் வரும் 7 அல்லது 8ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர்Continue Reading

மே.2 தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவுContinue Reading