அண்ணாமலை இரண்டு திரைப்படங்களை வெளியிடப்போகிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ். பாஜக இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தொடர்ந்து தனது குமுறலை கொட்டி வருகிறார் மருது அழகுராஜ். அவர், புத்தாண்டும் புதுப்படமும் என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது: தமிழ் புத்தாண்டு திருநாளாகிய ஏப்ரல் 14-ல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பா.ஜ.க. தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை “இரண்டரை லட்சம் கோடி” மற்றும்Continue Reading

மோடி என்னை பாராட்டி பேசிய பிறகு என்னை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று சிலர் அழைத்தது எனக்கு அவமானகரமானது என்று முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத், நேற்று தனது சுயசரிதையான ஆசாத் புத்தக வெளியீட்டு விழாவையொட்டி செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது குலாம் நபி ஆசாத் கூறியதாவது: பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக பிரதமர்Continue Reading

நாகர்கோயிலில் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, இளைஞர் காங்கிரஸார் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் தர்மராஜன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர்Continue Reading

இந்தியாவில் வாய்மொழி அவதூறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும்Continue Reading

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரைவரிசைப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இந்நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.Continue Reading

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவைContinue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரஸூக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கணித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் நான் இருந்திருந்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சிறிய கட்சிகளை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்க ஊக்குவித்திருப்பேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான புதிய காரணத்தை கண்டுபிடித்துContinue Reading

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டContinue Reading

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது. இந்நிலையில்Continue Reading